ஆறாம் வகுப்பில் தொடங்கி ஒன்பதாம் வகுப்புவரை அதாவது முதல் பப்ளிக் எக்சாமுக்கு முன்பு வரையிலான காலங்களில் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளின் “படிப்பு நடத்தையை” ஒழுங்குபடுத்தினால் அச்சிறார்கள் அவர்களாகவே பிழைத்துக் கொள்வார்கள்.
அதில் முக்கியமான பழக்கம் பாடங்களை முதலில் இருந்து கடைசிவரை வாசித்து சுயமாக தனக்கு தானே போதித்துக் கொள்ளும் பழக்கமாகும். உதாரணமாக பிளஸ் ஒன் பிஸிக்ஸ் பாடத்தில் வரும் ’MOTION IN A STRAIGHT LINE’ பாடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒரு மகனோ மகளோ இருக்கிறார். அவர் பிளஸ் ஒன் படிக்கிறார். அவரை அழைத்து பிஸிக்ஸில் வரும் MOTION IN A STRAIGHT LINE பாடத்தை ஆதி முதல் அந்தம் வரை ரிலாக்சாக ஒருமுறை வாசிக்க அறிவுறுத்துங்கள். “பாடம் புரிகிறதோ இல்லையோ. ஒருமுறை வாசி. முதல் வரியில் இருந்து பாடத்தின் கடைசி வரி வரை ஒருமுறை வாசி. நாளை சனிக்கிழமை. நாள் முழுவதும் உனக்கு லீவுதான். காலையில் ப்ரெஷாக எழுந்து பல் விளக்கி, முடிந்தால் குளித்து இந்த பாடத்தை எடுத்துக் கொள். நிதானமாக வாசி. உடனே புரிந்து விட வேண்டும் என்ற டென்சன் வேண்டாம். புரிந்த அளவுக்கு முதல் வாசிப்பாக ஒரே முறை வாசி. “ என்று ஒருமுறை முழுவதுமாக வாசிக்க தூண்டுங்கள்.
பள்ளி பாடம் கற்றலில் இரண்டு படிநிலைகள் இருக்கின்றன.
முதலாவது Concept Learning .
இரண்டாவது அதை Long term memory ஆக்கும் Training எடுத்துக் கொள்ளுதல்.
- Concept Learning
- Training
இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான்.
ஒருவன் Concept Learning மட்டும் எடுத்துக் கொண்டு
Training எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் வீண் தான்.
Training மட்டும் எடுத்துக் கொண்டு Concept Learning ஐ கைவிட்டால் அதுவும் வீண்தான்.
அந்த Concept Learning முக்கியமான ஆரம்ப கட்டம்தான் சுயமாக பாடங்களை வாசித்தல்.
பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை அதை செய்ய தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு பாடத்தை முழுவதுமாக ஒரு மாணவன் சுயமாக ஒருமுறை வாசித்து முடிக்கும் போது அவன் ஆசிரியர் கற்றுக் கொடுக்காமலேயே நிறைய விஷயங்களை புரிந்து கொள்கிறான்.
ஆசிரியர் அப்பாடத்தை திரும்ப வகுப்பில் எடுக்கும் போது இன்னும் தெளிவடைந்து விடுகிறான்.
சட்டென்று கல்வி கற்றலில் ஒரு தன்னம்பிக்கை நிலையை அடைந்து விடுகிறான்.
அதை விட முக்கியம் இப்படி சுயமாக பாடங்களை வாசிக்கும் பழக்கம் கொண்ட மாணவர்கள் பள்ளிக்கூடம், ஆசிரியர், கல்விகற்றல் போன்ற விஷயங்களோடு எளிதாக Commit ஆகிக்கொள்கிறார்கள்.
சுயமாக கற்றல் என்ற Deep Pleasure ஐ ஒரு மாணவருக்கு புரிய வைக்கும் போது வாழ்க்கையை சீரழிக்கும் சில்லறை Pleasure களில் இருந்தும் தப்பித்துக் கொள்கிறான்.
’MOTION IN A STRAIGHT LINE’ பாடத்தை ஒரு பிளஸ் ஒன் இயற்பியல் ஆசிரியர் வகுப்பில் எடுக்கிறார் என்றால் அவரால் பாடத்தின் ஒவ்வொரு வரியையும் திரும்ப திரும்ப வாசித்து வாசித்து எடுக்க முடியாது. அதற்கான நேரம் அவருக்கு கிடையாது.
ஆகையால் அவர் வரிக்கு வரி வாசிக்காமல் பாடத்தில் இருக்கும் தியரி பகுதிகளை வேகமாக லெக்சர் மூலம் விளக்கி செல்வார். அதில் வரும் derivation களை மட்டும் எடுத்து, இயற்பியல் கணக்குகளை மட்டும் எடுத்து பாடத்தை முடிப்பார்.
ஒரு பிளஸ் ஒன் இயற்பியல் ஆசிரியரால் அவருக்கு கொடுக்கப்பட்ட 40 நிமிடத்தில் அவ்வளவுதான் செய்யவும் முடியும். வரிக்கு வரி அவர் எடுக்கலாம். ஒரு நாளுக்கு நான்கு பீரியட்களை அவருக்கு கொடுத்தால் அவரால் அதை செய்ய முடியும். அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் இப்படி லெக்சர் கொடுத்து முக்கியமான பகுதிகளை மட்டும் சொல்லி போகிறார்கள்.
நம் மாணவர்கள் அதை இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் வெளியே விட்டு தேர்வுக்கு முந்தைய நாள் “கொஸ்டினுக்கு ஆன்ஸர் “ என்ற பதத்தில் மட்டும் படித்து தேர்வு எழுதுகிறார்கள்.
இப்படி திரும்பி அப்படி திரும்புவதற்கள் காலாண்டு தேர்வும் முடிந்து விட்டது. கணக்குப்ப்படி பிஸிக்ஸில் கிட்டத்தட்ட முதல் ஐந்து பாடங்கள் எடுக்கப்பட்டு இம்மாணவரால் அது படிக்கப்பட்டு தேர்வாகவும் எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் அந்த ஐந்து பாடங்களில் இருந்தும் ஒரு கான்செப்ட் கூட அவனுக்கு தெரியாத நிலையில்தான் அவன் விழிக்கிறான். அவன் 75 சதவிகித மார்க் எடுத்து நல்ல மார் மாணவனாக அறியப்படுகிறான். ஆனால் எந்த Concept ம் தெரியாதவனாக இருக்கிறான்.
தான் ஏன் பிளஸ் ஒன் பிசிக்ஸ் படிக்கிறோம் ?,
ஏன் தேர்வு எழுதுகிறோம் ?
என்ற எந்த விதமான சுயவிழிப்பும் இல்லாத திகைத்த நிலையை மாணவர்கள் அடைகிறார்கள். கல்வியில் தன்னம்பிக்கை இல்லாமல் ஆகிறார்கள்.
இதை எல்லாம் தவிர்க்க யார் என்ன செய்யவேண்டும் ?
இதில் வகுப்பாசிரியர்களால் எதுவுமே செய்ய முடியாது.
இதை முழுக்க முழுக்க பெற்றோர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாக தத்தம் பிள்ளைகளை “சுயமாக வாசிக்க” வைக்கும் வேலையை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உங்கள் மகளோ, மகனோ வாசிக்கவில்லை என்றால் பெற்றோர்களாக நீங்கள் அதற்கு மெலிதாக பதட்டப்பட வேண்டும்.
உங்கள் பிள்ளைகளை ஓரிடத்தில் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து ஒரு பாடத்தை முழுமையாக வாசித்து முடிக்க வைக்க பெற்றோராக நீங்கள் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி போகலாம்.
- நீ இதை மட்டும் செய் உனக்கு அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என்று பொருளாசை காட்டி அதை செய்ய வைக்கலாம்.
- லேசாக மிரட்டி காரியம் சாதிக்கலாம்.
- கெஞ்சி காரியம் சாதிக்கலாம்.
- கொஞ்சி காரியம் சாதிக்கலாம்.
“நாளைக்கு காலையில ப்ரெண்சோட வெளிய போகனும்னு சொல்ற. ஒக்கே ஆனா இந்த பாடத்தை ஒருதடவை முழுசா வாசிச்சிட்டு போ. அப்படின்னா போ. இல்லன்னா பர்மிசன் கிடையாது” என்று நேரடியாகவே பேரம் பேசுங்கள். தவறொன்றுமில்லை.
மகனோ மகளோ அதற்கு ஒத்துக் கொண்டு காலை எழுந்து ஒருமணி நேரம் இருந்து படிக்கிறார்கள் என்றால் அதில் கால்வாசிதான் கவனம் செலுத்தி வாசித்திருப்பார்கள். இருக்கட்டும். பரவாயில்லை.
”அந்த ஒரே ஸ்டிரெச்சில் ஒரு பாடத்தை முழுவதுமாக வாசிக்கும் பழக்கத்தை அவர்கள் செய்கிறார்களா” என்பதுதான் முக்கியம். நாலைந்து முறை ஒரு மாணவர் மெளனமாக இப்படி பாடங்களை ஒரே ஒருமுறை சுயமாக வாசிக்க கற்றுக் கொண்டார் என்றால் வாழ்க்கை முழுவதும் அப்பழக்கம் அவரை விடாமல் பற்றிக் கொள்ளும். அது அவ்வளவு இனிமையானதாகும்.
ஆறாம் வகுப்பு தொட்டு ஒன்பதாம் வகுப்புவரையில் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் நல்ல மார்க் எடுக்கிறார்களா? படிக்கிறார்களா? என்பதெல்லாம் இரண்டாவதாக பாருங்கள்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மகளையோ மகனையோ ஓரிடத்தில் அமர்ந்து ஒரு பாடத்தை ஒரே ஒருமுறை முழுவதுமாக வாசிக்க சொல்லுதல் மட்டும் ஆகும். அப்பாடம் புரிகிறதோ புரியவில்லையோ பரவாயில்லை. ஆனால் ஒரே ஒருமுறை வாசித்திருக்க வேண்டும்.
அப்படி வாசிக்கும் போது அம்மாணவர் யாரும் தூண்டாமலேயே Concept Learning க்குள் போய்விடுகிறார்.
அப்படி Concept Learning க்குள் போய் வரும் போது தேர்வு முறை படிப்பை படிக்கும் Training எடுத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும்.
99 சதவிகித பெற்றோர்கள் இந்த “பிள்ளைகளை ஒரு பாடத்தை ஒருமுறை முழுவதுமாய் வாசிக்க வைக்கும்” விஷயத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பொறுப்பற்றவர்களாகவும், தான்தோண்றித்தனமாகவும்,
அலெட்சியமாகவும் , பேக்குகளாகவும்தான் இருக்கிறார்கள்.
பள்ளி ஆசிரியர்களும் தத்தம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இதை புரிய வைக்க முயற்சி செய்வதில்லை. காரணம் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த ஒருமுறை சுயமாக வாசிப்பதினால் வரும் நன்மை பற்றி பெரிய அறிவு கிடையாது.
இனிவரும் காலங்களில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து ”உங்கள் பிள்ளையை சுயமாக பாடங்களை வாசிக்க சொல்லுங்கள். நாங்கள் வருங்காலத்தில் எடுக்கக் கூடிய பாடமானாலும் சரி. ஒருமுறை வாசிக்க சொல்லுங்கள்” என்று அதன் நன்மையை புரிய வைக்க வேண்டும்.
இது எல்லாம் தாண்டி உங்கள் பிள்ளைக்கு இப்பழக்கத்தை கொண்டு வருவது மூலம் அவர்களின் எனெர்ஜியை நேரடியாக நீங்கள் அதிகரிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் இன்னும் உற்சாகமாக பள்ளிக்கு செல்வார்கள்.
இன்னும் உற்சாகமாக கல்வி கற்பார்கள். அவர்கள் முகத்தில் ஒளி அழகு அதிகரிக்கும்.
அதற்கு ஒரு பெற்றோராக செய்ய வேண்டிய ஒரே ஒரு எளிமையான காரியம் ” பின்புறத்தை சேரில் இருத்தி ஒரு பாடத்தை ஒரே ஸ்டிரெச்சாக ஒருமுறை வாசி” என்று உங்கள் பிள்ளைகளை தூண்டுவது மட்டும்தான்.
செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் ஆரோக்கியமான மாற்றத்தை காண்பீர்கள்.
Courtesy : Naga Rajan
(it is from facebook)